Sunday, May 25, 2008

க‌ர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பேற்கிறது பாஜக


க‌ர்நாடக மா‌நில ச‌ட்ட‌சபைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, வரும் 28-ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.
அன்றைய தினத்தில், கர்நாடகா முதல்வராக பி.எஸ்.எடியூரப்பா பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.


இம்மா‌நில‌த்தின் 224 தொகு‌திகளு‌க்கு‌ம் 3 க‌ட்ட‌ங்களாக நட‌ந்த தே‌ர்த‌லி‌ல் தனியொரு கட்சியாக பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றது.
ஆட்சியமைப்பதற்கு அரு‌தி பெரு‌ம்பா‌ன்மை பெற 113 இட‌ங்க‌ள் தேவை என்ற நிலையில், அந்த எண்ணிக்கையை எட்ட 3 இடங்களே குறைவாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற 4 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவு தங்களிடம் உள்ளது என்றும், மே 28-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் உறுதிபட தெரிவித்துள்ளது.


இந்தத் தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களைக் கைப்பற்றியது. கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் என்ற வகையில், இந்தத் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.


தேவேகெளடா‌வி‌ன் மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களைக் கைப்பற்றின. இதர கட்சிகளும் சுயேட்சைகளும் 6 இடங்களில் வெற்றி பெற்றன.


பாஜக முதன்முறையாக தென்னிந்தியாவிலுள்ள மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பது கர்நாடகாவே.

0 comments: