Monday, May 26, 2008

எடியூரப்பா கர்நாடகத்தின் புதிய முதல்வர்..

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூடி பி.எஸ். எடியூரப்பாவை தங்களின் சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதல்வர்) தேர்ந்தெடுத்தனர். மேலும் அவர் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமார், மாநில பாஜக தலைவர் சதானந்த கவுடா ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில் எடியூரப்பா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக எடியூரப்பாவின் வீட்டில் தலைவர்களும், தொண்டர்களும் குவிந்ததால் விழாக்கோலமாக காணப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டதுடன் வீடு முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

0 comments: