Wednesday, February 27, 2013

ஹரிதாஸ்

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி திரைப்படங்களின் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் V.ராமதாஸ் ஆகியோரின் மூன்றாவது திரைப்படம் ஹரிதாஸ். முந்தய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியினை தாராததை தொடர்ந்து இயக்குனர் குமரவேலன் புதிய பரிமாணத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஹரிதாஸ்.




காவல்துறையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிவதாஸ்  பத்து வயது வரை பாட்டியிடம் வளரும் தன் மகன் ஹரிதாஸைப்பற்றி பெரிதாக கவனம் எடுத்து
கொள்ளாவில்லை. பாட்டியின் மறைவிற்கு பிறகு தாயில்லா மகனை தனது முழு கவனிப்பில் வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

ஆடிசம் குறைபாட்டால் அவதிப்படும் மகனை வைத்துக்கொண்டு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்  ஆன தந்தை  சமுதாயத்தில் எத்தகைய இன்னல்களை சந்திக்கிறார் என்பதுதான் கதையின் கரு. ஒருபக்கம் என்கவுன்டர் துரத்தல்கள், மறுபக்கம் தந்தைப்பாசம், கொஞ்சம் நகைச்சுவை போன்ற கலவையை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் குமரவேலன். 

  

இயல்பான நடிப்புக்கு பேர்பெற்ற நடிகர் கிஷோர் நாயகனாக அடியெடுத்து வைத்திருக்கும் முதல் திரைப்படம். கால்பந்தணியின் கோச், போலீஸ் ஆபீசர்
என்று இதுவரை திரையுலகில் வலம் வந்த நடிகர் கிஷோர் முதன்முறையாக குணச்சித்திர வேடத்தில் பிரம்மாண்ட  நடிப்பு.



அரசு பள்ளி ஆசிரியாக நடிகை ஸ்னேகா திருமணத்திற்க்கு பின்பு இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் முதல் படம். டூயட், காதல் போன்ற எந்த காட்சிகளும் இல்லாமல் ஆசிரியையாகவே திரைப்படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார் ஸ்னேகா.


ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனாக வரும் மாஸ்டர் பிரித்விராஜ், அளவான நடிப்பை தனது முகபாவனைகளால் அசாதரணமாக
வெளிப்படுத்தியிருக்கிறார்.

டாக்டராக வரும் யூகிசேது ஆடிசம் குறைபாட்டை சுவாரஸியமாக சொல்லியிருப்பதும், விளையாட்டு பயிற்சி ஆசிரியராக வரும் ராஜ்கபூர் ஹரிதாஸுக்கு பயிற்சி தர முடியாது என்று காரணம் அடுக்குவதை யூகிசேது கதாபாத்திரம் மூலம் கவுண்டர் செய்வதும் மிக பிரம்மாண்டம்.

காட்சிக் கோர்வைகளை தனது  ஒளிப்பதிவின் மூலம்சிறப்பாக வடிவமைத்து திரைப்படத்தின் உண்மையான நாயகனாய் வலம்வருகிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. விஜய் ஆண்டனியின் பின்னணி இசை படத்தோடு ஒன்றியிருக்கிறது.

பஞ்சு டைலாக் “திருந்துரவன் ஒருமுறை தான் மன்னிப்பு கேப்பான். திரும்ப திரும்ப கேக்குறவன் திருந்தவே மாட்டான்

காதல், தீவிரவாதம், அரசியல் ரெளடிகளின் அராஜகம், கிராமத்து பஞ்சாயத்து என்று அலுத்துபோயிருக்கும் தமிழ் திரையுலகில் ஹரிதாஸ் ஒரு புதிய பரிமாணம்.

Friday, February 15, 2013

வனயுத்தம்

சர்சைகளில் மீண்டும் மீண்டும் சிக்கிக்கொள்வதில் ஏனோ இயக்குனர் ரமேஷுக்கு அலாதி பிரியம் போலும். ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய குப்பி, போலீஸ் குவார்ட்டர்ஸ் போன்ற திரைப்படங்களின் வரிசையில் இப்பொழுது சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படம் “வனயுத்தம்”.



சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது கூடுதல் பரபரப்பு!

வீரப்பனின் வாழ்க்கையை பற்றிய இத்திரைப்படம் வீரப்பனின் குடும்பத்தின் அந்தரங்கத்தை மீறுவதாக இருப்பதுடன் வீரப்பனின் மகள்களின் திருமணத்துக்கும் பிரச்சனைகளைத் தரக்கூடியது என்று கூறி, அவரின் மனைவி முத்து லஷ்மி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் 25 லட்சம் ரூபாயினை நஷ்டஈடாக பெற்றுக்கொண்டு வழக்கினை திரும்ப பெற்றதினை தொடர்ந்து தமிழில் வனயுத்தமாகவும் கன்னடத்தில் அட்டகாஸா இத்திரைப்படம் இன்று வெளிவந்திருக்கிறது.

சமானியனான வீரப்பன் எப்படி யானை தந்தங்களை கடத்தினான்.. பின்னர் எப்படி சந்தன மரங்களை கடத்த தொட்ங்கினான்.. வனத்துறை அலுவலருக்கும் அவனுன்கும் உள்ள உறவு பின்னர் எப்படி பகையாய் மாறியது.. காவல்துறையிடம் பிடிபட்ட அவன் கூட்டாளிகள் சிறையில் படும் வேதனை, பணத்திற்காக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் பின்னர் பழ நெடுமாறன் - நக்கீரன் கோபால் அவரை எப்படி விடுத்தனர் பின்னர் தமிழக அரசின் சிறப்பு காவல் படையினரால் எப்படி கொல்லபட்டான் போன்ற விருவிருப்பான சம்பவங்களுடன் இத்திரைப்படன் வேகமாக செல்கிறது.



இத்திரைப்படத்தில் வீரப்பனாக கிஷோர் தனது இயல்பான நடிப்பில் அவர் காதாபாத்திரத்தினை சிறப்பித்திருக்கிறார்.



போலீஸ் அதிகாரியாக அர்ஜுன் மிகச்சிறப்பான தேர்வு.




சில மணித்துளிகளே வந்து செல்லும் லஷ்மிராய்..



”ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருக்கும் போது “ டேய்.. பதினைஞ்சாயிரம் செலவு பண்ணி கடத்தியிருக்கோமே? காசு கொடுப்பாங்களா?”  என்று கேட்பது தான் இத்திரைபடத்தின் ஒரே ஒரு காமடி காட்சி.

இசை: சந்தீப் செளதா - பின்னணி  இசை  அருமை. திரைப்படத்தில் பாடல்கள் ஏதும் இல்லை.

பரபரப்பு மற்றும் சர்சைகளுடைய திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர் ரமேஷ் அவர்களின் துணிச்சல் பாராட்டுதலுகுறியது.

Wednesday, February 13, 2013

M.V.ராஜம்மா - அம்மா நடிகை

கன்னட திரையுலகிலிருந்து தமிழ் திரையுலகிற்கு மாடர்ன் தியேடர்ஸ் தயாரிப்பில் வெளியான “உத்தம புத்திரன்”  படதில் அறிமுகமாகி அதைதொடர்ந்து வெளியான “ கோகுல தாசி”, “ மதன காமராஜன்”, “குமாஸ்தாவின் பெண்” போன்றவற்றிலும்  பிரபல நடிகர் P.U.சின்னப்பா அவர்களுடன் இணைந்து நடிதார் M.V.ராஜம்மா.







அடுத்ததாக  நடிகர் T.R.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்த “ ஞான செளந்தரி”திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடந்ததை தொடர்ந்து " பாரிஜாதம்”, ”லைலா மஜனு” படங்களிலும் T.R.மகாலிங்கம் அவர்களுடன் இணைந்து நடித்தார்.



பேறிஞர் அண்ணா அவர்களின் கைவண்ணத்தில் உருவான “வேலைக்காரி” திரைப்படத்தில் வேலைக்காரி கதாபாத்திரத்தில் நடிகை M.V. ராஜம்மா அவர்களின் நடிப்பு இன்றளவும் மறக்க முடியாது.

A. பீம் சிங் இயக்கத்தில் வெளியான “ பாகப்பிரிவினை” திரைப்படத்தில் மாற்றுத்திரனாளியாக நடித்த நடிகர் திலகம் சிவாஜியின் தாயாக நடித்து ரசிகர்களின் மனதை உருக வைத்தார்.

மக்கள் திலகம் MGR-வுடன் “ வேட்டைகாரன்” திரைப்படத்தில் இணைந்து நடிகை சாவித்திரியின் தாயாக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தினார் M.V. ராஜம்மா.



கர்ணன் திரைப்படத்தில்  குந்திதேவி கதாபாத்திரத்தில் தோன்றி தனது உன்னதமான நடிப்பால் மக்களை கலங்க செய்தவர் நடிகை M.V.ராஜம்மா.

கலைஞரி மு.கருணாநிதி யின் வசனத்தில் வெளியான “ தாயில்லா பிள்ளை” திரைப்படத்தில் தாய்வேடம் ஏற்று அழகு தமிழ் வசனங்களை அற்புதமாக பேசி நேர்த்தியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இவ்வாறாக நடிகை M.V.ராஜம்மா அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.