தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாய் அறிமுகமாகி இயக்குனர் சசிகுமாரோடு நடித்த சுந்திரபாண்டியன் திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து யாருமே எதிர்பார்காத வகையில் தற்போது வெற்றி நடை பயின்றுகொண்டிருக்கும் பீட்சா திரைபடத்தின் மூலம் முன்னனி கதாநாயகனாய் உயர்ந்துள்ள விஜய சேதுபதி நடித்த மற்றும் ஒரு படைப்பு - நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்..
விஜய் சேதுபதிக்கு அடுத்த நாள் தான் காதலித்த பெண்ணுடன் திருமணம். தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்து, வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு Stop block போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் - திருமணம் நடந்ததா அவருக்கும் மீண்டும் நினைவு திரும்பியதா என்பதே ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” இத்திரைப்படத்தினை இவ்வளவு சுவாரசியமாய் எடுத்துச் சென்றிருக்கும் புதிய இயக்குனர் பாலாஜிதரனிதரனின் திறமை பாராட்டப்படவேண்டும்.
இந்த படைப்பின் ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் அமைந்திருக்கிறது என்பது முக்கிய செய்தி.
இந்த படைப்பின் ஒளிப்பதிவாளர் ப்ரேமின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் அமைந்திருக்கிறது என்பது முக்கிய செய்தி.
முதல் காட்சியில் அடிபட்டவுடன் அவர் பேசும் டயலாக் “நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? என்று நடந்ததை சொல்லிவிட்டு, அதுக்கப்புறம் என்னாச்சி? என்று கேட்டபடியே “பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? Medula ablangada வில அடிபட்டிருக்கும் அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்” என்று அவரே சமாதானமும் கொடுத்த மாத்திரத்தில் மீண்டும் அதே டயலாக்கை பேச ஆரம்பிப்பது அட்டகாசம்.
காதலியையே கல்யாண ரிஷப்ஷனில் முதல் முறையாய் பார்ப்பது போல பார்த்து “ச்சே... என்னடா மேகப் இது.. பேய் மாதிரி இருக்கு” என்று திரும்பத் திரும்ப சொல்ல, அதனால் கல்யாணம் நிற்கும் வரைக்கும் போகும் காட்சியும், “எப்படி டா சைராபானுவுக்கு துரோகம் பண்றது?” என்று ஆறாம் க்ளாஸில் காதலித்த பெண்ணைப் பற்றி பேசுமிடமெல்லாம் அருமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்திருக்கிறார் விஜய சேதுபதி.
படத்தின் சிறப்பம்சங்கள்:
- நண்பர்களாய் வரும் மூன்று பேர். மிடில் ஏஜ் கேரக்டரில் வரும் நண்பரின் முழியும், பேச்சும் அட்டகாசம். கிரிக்கெட்டில் ஓவர் காஜு அடிப்பதாகட்டும், சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மற்றவனை மாட்டி விட்டு வேடிக்கைப் பார்க்குமிடமாகட்டும் மனிதர் கலக்குகிறார்.
- திரைக்கதை எதுவாய் இருப்பினும் - அதில் நாயகன் துரத்தி துரத்தி காதலிக்க ஒரு நாயகி.. ஒரு டூயட் ஒரு சோகம், ஒரு குத்து பாடல்..என எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல்... ஒரு புதுமையான கோணம்...
- Censor certificate - Title போட்டுமுடிந்தவுடன் அறிமுகப்படுத்தப்படும் நாயகன் - நாயகி என்றில்லாமல் படத்தின் முக்கால்வாசியிலேயே நாயகின் அறிமுகம்.
- நானும் வில்லன் இல்லாத ஒரு திரைப்படமா.. அவனயாவது காமிப்பாங்கனு கடைசிவரைக்கும் பொருமை காத்தேன்.. படம் முடிஞ்சது தான் மிச்சம்.
தனது வெற்றிப்பட வரிசையில் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் ஒரு தனி முத்திரை பதிக்கும் என்பதில் ஐயமில்லை...
Nice review :) BTW, is the movie two and half hours long?
ReplyDelete@sowmya - Yes it is... When the interval came after 55mins i too thought that the movie will get over in the next half an hour or so.. but.. it wasnt so..
DeleteSuper review jothivel sir.... inntha padathula negnga patha sila puthumaiyana vishyanagal, katichigal innum serthu irunthal muzhumai yana oru look kidaithu irrukum... super attempt vazthukkal
ReplyDelete