Wednesday, March 6, 2013

இரங்கல்: நடிகை ராஜசுலோசனா



1953-ல் வெளியான ”குணசாகரி” என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜசுலோசனா அதன்பின்னர் வெளியான ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பின்மூலம் புகழேனியின் உச்சிக்கே சென்றார்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என திரையுலக சாதனையாளர்களுடன் நடித்தவர் ராஜசுலோசனா.

ராஜசுலோசனா நடிப்பு மட்டுமில்லாமல்  தன் இனிய குரலினாலும் கைதி கண்ணாயிரம் படத்தில் ”கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்” -பாடலிலும்,


நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய ”குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா”…
என்ற பாடலும்அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார்.

 நாயகியாய் மட்டுமின்றி  குணச்சித்திர வேடங்களில் எம்ஜிஆரின் இதயக்கனி ரஜினியின் காயத்ரி- ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

 நடிப்பு, பாடல் மட்டுமின்றி குச்சுப்புடி நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்திய ராஜ சுலோச்சனா ஏராளமானோருக்கு நடனமும் கற்றுத் தந்துள்ளார்.

தமிழ்-தெலுங்கு-கன்னடம்-இந்தி என நூற்றுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பெற்ற ராஜசுலோசனா தனது 77 வயதில் சில நாட்களாய் நோய்வாய் பட்டிருந்து ( 6 மார்சு 2013) அன்று இயற்க்கை எய்தினார்.

1 comment:

  1. Unmai. Avalavu nalla nadigai !! Oru time la, tamil industry avanga kaila than !! Brilliant actor. Definitely a big loss for the tamil industry

    ReplyDelete