Thursday, December 10, 2009

மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் இணையதள வலைப்பக்கத்தை மாண்புமிகு நிதியமைச்சர் திரு.க. அன்பழகன், மாண்புமிகு மின்துறை அமைச்சர் ஆர்க்காடு திரு.நா.வீராசாமி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஆகியோர் முன்னிலையில் இன்று (9.12.2009) தொடங்கிவைத்தார்கள்.

வளர்ந்து வரும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உலகிற்கேற்பத் தமிழ்ச் செம்மொழி வளம்பெறும் வகையிலும் தற்கால வாழ்க்கை முறைக்குத் தமிழ்ச்செம்மொழி இலக்கியங்கள் காட்டும் விழுமியங்களை வெளிப்படுத்தும்வகையிலும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்
ஆய்வரங்கம் அமையவுள்ளது.


வலைத்தளப் பக்கம்


தமிழர்களின் மரபு வழிப்பட்ட நாதசுரத்தில் மல்லாரி இசையுடன் வலைப் பக்கம் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் இலச்சினையும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு இலச்சினையும் இடம்பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வலைத்தளப்பக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடது பக்கம் சங்ககால நாணய முத்திரையும் வலதுபக்கம் சிலம்பும், தொன்மையான தமிழ் எழுத்து வடிவங்களும், சியதுவெளிக்குறியீடுகளும், முத்திரைகளும் இடம் பெற்றுள்ளன.

அறிவிப்புகள்

இப்பக்கத்தில், மாநாடு தொடர்பான அறிவிப்புகளை அறியலாம்.

கோவை 2010


இப்பக்கத்தில், கோவை மாநகர் பற்றிய செய்திகளோடு சங்ககால வரலாற்றில் கொங்கு மண்டலம் பெற்றிருயத சிறப்புகளை அறியலாம்.
தமிழ்ச்செம்மொழி


இப்பக்கத்தில், உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் பெற்றிருக்கும் தகுதிகளுக்கேற்ப அறியதேற்புப் பெற பரிதிமாற் கலைஞர் முதலாகத் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் மேற்கொண்ட முயற்சிகளும் பணிகளும் இடம்பெறுவதோடு இயதிய அரசின் ஏற்பினைப் பெற்றுத் தயத முதல்வர் அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க பதிவுகளும் இடம் பெறுகின்றன.

ஆய்வரங்கப் பொருண்மைகள்


இப்பக்கத்தில், நடைபெறவுள்ள மாநாட்டு ஆய்வரங்கத்தில் இடம்பெறக் கூடிய பொதுநிலைச் சிறப்பரங்கம், தனிப்பொழிவரங்கம்,. கலயதுரை யரங்கம், கருத்தரங்கம் ஆகியவை பற்றியும் ஆய்வுக்கட்டுரைகளின் பொருண்மை விவரங்களும் தரப்பட்டுள்ளன.

பங்கேற்க:

இப்பக்கத்தில், மாநாட்டு ஆய்வரங்கத்தில் கட்டுரையாளராக,நோக்காளராகப் பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்து கொள்ளும் வகையில் படிவங்களும் கட்டுரையாளர் அனுப்ப வேண்டிய ஆய்வுச் சுருக்கத்திற்கான பகுதியும் இடம் பெற்றுள்ளன. வலைத்தளப் பக்கத்திலிருயதே பதிவு செய்து கொள்ளும் வகையிலும் தொடர்பு கொள்ளும் வகையிலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுச் சொல் வழங்கப்படும் அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களில்

இப்பக்கத்தில், மாநாட்டு ஆய்வரங்கம் தொடர்பாக அவ்வப்போது வெளிவரும் ஊடகப் பதிவுகள் இடம்பெறும்.

இணைப்புத் தளங்கள்

தொடர்புடைய தமிழ் இணையப் பக்கங்களுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மனஉரை:

மாநாட்டு ஆய்வரங்கம் தொடர்பாக மனப்பதிவுகளை வெளிப்படுத்தும் வகையில் மனஉரைப்பகுதி இடம் பெற்றுள்ளது.

Tuesday, December 8, 2009

கூவம்....


சென்​னைப் பெரு​ந​க​ரின் அகண்ட சாக்​க​டை​க​ளாக உள்ள கூவம் ஆறு, அடை​யாறு,​ பக்​கிங்​காம் கால்​வாய் மூன்​றை​யும் தூய்​மைப்​ப​டுத்தி,​ சிங்​கா​ரச் சென்​னையை உரு​வாக்​கு​வ​தற்​காக சென்னை நதி​கள் ஆணை​யம் அமைக்​கப்​பட்டு,​ அதன் தலை​வர் பொறுப்​பை​யும் ஏற்​றுக்​கொண்​டுள்​ளார் துணை முதல்​வர் மு.க. ஸ்டா​லின்.



​ ​ 1967-ல் முதன்​மு​த​லா​கத் தமி​ழ​கத்​தில் திமுக ஆட்சி அமைத்​த​போதே,​ கூவத்​தில் பட​கு​வி​டும் திட்​டத்​தைத் தொடங்​கி​னார் அன்று பொதுப்​ப​ணித்​துறை அமைச்​ச​ராக இருந்த இன்​றைய முதல்​வர் மு. கரு​ணா​நிதி. அதற்​கா​கக் கட்​டப்​பட்ட பட​குத்​து​றை​க​ளின் சிதைந்த மிச்​சங்​களை இப்​போ​தும் சில இடங்​க​ளில் காண முடி​கி​றது. அப்​போது அவ​ரால் அத்​திட்​டத்தை செய்​து​மு​டிக்க முடி​ய​வில்லை. "மகன் தந்​தைக்​காற்​றும் உதவி' அவர் தொடங்​கிய பணியை நிறைவு செய்​வ​து​தான்.


 கூவம் மிக​மிக மோச​மாக மாச​டைந்து,​ கழி​வு​கள் நக​ர​வும் முடி​யா​த​படி தேங்​கிக் கிடக்​கி​றது. கூவத்​தில் உள்ள தண்​ணீரை எடுத்து,​ தெளி​ய​வைத்து,​ வடி​கட்​டிய நீரில் மீன்​களை விட்​டால்,​ 4 மணி நேரத்​தில் மீன்​கள் செத்​து​வி​டு​கின்​றன என்​ப​து​தான் கூவம் குறித்து ஆய்​வு​மு​டி​வு​கள் கூறும் உண்மை. கூவம் நீரில் ஆக்​ஸி​ஜன் இல்லை. வெறும் நச்சு உலோ​கக் கலப்​பும்,​ சேறும் சக​தி​யும்​தான் உள்​ளன. அடை​யா​றும் அந்​த​வி​த​மா​கவே படு​மோ​ச​மாக மாச​டைந்து கிடக்​கி​றது. மணப்​பாக்​கம் தடுப்​பணை வரை அடை​யாறு கொஞ்​சம் தூய்​மை​யாக இருந்​தா​லும்,​ சென்னை பெரு​ந​க​ரத்​தில் நுழைந்​த​வு​டன் அதன் மேனி​யில் வெறும் குப்​பை​க​ளும் நச்​சுக் கழி​வு​க​ளும்​தான் கொட்​டப்​ப​டு​கின்​றன. "அடை​யாறு போட் கிளப்' என்ற ஒன்று இங்கே இருந்​தது,​ இப்​போ​தும் இருக்​கி​றது ​ என்​பதே நம்ப முடி​யாத விஷ​ய​மாக ஆகி​விட்​டது.

Thursday, December 3, 2009

 நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகளும், 1 ஆசிரியையும் பலியாகினர்.

கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் இன்று காலை நாகக்குடையான் பகுதியிலிருந்து 21 குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது கத்திரிபுலம் பண்ணையடி குத்தகை என்ற இடத்தருகே சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி அருகிலிருந்த குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வேனில் இருந்த 9 குழந்தைகள் மற்றும் 1 ஆசிரியை பலியானார்கள். 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஓட்டுனர் விபத்தின்போது செல்போனில் பேசியவாரே வண்டி ஓட்டியதின் விளைவாகவே இவ்விபத்து நிகழ்ந்திருக்கிறது. இவ்வண்டியின் ஓட்டுனரும் நடத்துனரும் தப்பியோடிவிட்டனர்.


குளத்தில் மூழ்கிய குழந்தைகளை மீட்க.. குளத்திலிருந்த தண்ணீர் அனைத்தையும் இறைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

1984 டிசம்​பர் 2 ம் தேதி இரவு 10 மணி.


​மத்​தி​யப் பிர​தேச மாநி​லம்,​ போபால் நக​ரில் உள்ள யூனி​யன் கார்​பைட் நிறு​வ​னத்​தின் கொள்​க​லன் 610-ல் தண்​ணீர் கலக்​கி​றது. அந்த டேங்க்​கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோ​ச​ய​னைட்,​ இந்​தத் தண்​ணீர் பட்​ட​தும் வேதி​யி​யல் மாற்​றம் அடை​கி​றது. 200 டிகிரி செல்​சி​யஸ் அள​வுக்கு வெப்​பம் உயர்​கி​றது. அழுத்​தம் தாங்​கா​மல் கொள்​க​ல​னின் பாது​காப்பு மூடி​கள் திறந்து கொள்​கின்​றன. நள்​ளி​ர​வில் விஷ​வாயு வெளி​யே​றிப் பர​வு​கி​றது...போபால் நகர் முழு​வ​தும்!​ ​

​அப்​போது அந்​ந​க​ரின் மக்​கள் தொகை 5.2 லட்​சம். இவர்​க​ளில் 2 லட்​சம் பேர் சிறு​வர்​கள். 3000 பேர் கரு​வுற்ற தாய்​மார்​கள். ​


​டிசம்​பர் 3-ம் தேதி காலை போபால் நகர மக்​கள் அனை​வ​ரும் கண்​ணெ​ரிச்​சல்,​ மூச்​ச​டைப்​பு​டன் கண்​வி​ழிக்​கின்​ற​னர். அன்​றைய ஒரு நாளில் மட்​டும் சுமார் 4000 பேர் இறந்​த​னர் என்று அதி​கா​ரப்​பூர்​வ​மாக அறி​விக்​கப்​பட்​டது. உண்​மை​யில்,​ இறந்​த​வர்​க​ளின் எண்​ணிக்கை இரு மடங்கு என்று சொல்​லப்​ப​டு​கி​றது. அடுத்த 72 மணி நேரத்​தில் இறந்​த​வர்​கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்​பால் மெல்​லச் செத்​த​வர்​கள் 25,000 பேர். ​

​இன்​ன​மும் சாகா​மல் இருக்​கும் இரண்டு விஷ​யங்​க​ளில் முத​லா​வது,​ போபால் மாவட்ட நீதி​மன்​றத்​தில் நடை​பெ​றும்,​ யூனி​யன் கார்​பைடு நிறு​வ​னத்​தின் மீதான வழக்கு ஒன்​று​தான். இரண்​டா​வ​தாக,​ யூனி​யன் கார்​பைடு விட்​டுச்​சென்ற 390 டன் நச்சு வேதிப்​பொ​ருள்​கள் இன்​ன​மும் போபா​லின் நிலத்​தடி நீரைக் கெடுத்​துக் கொண்​டி​ருக்​கி​றது.

Wednesday, December 2, 2009







 திரு​வண்​ணா​ம​லை​யில் செவ்​வாய்க்​கி​ழமை கார்த்​திகை மகா தீப விழா கோலா​க​ல​மாக நடை​பெற்​றது.