Sunday, December 16, 2012

கும்கி


மைனா என்னும் வெற்றி படைப்பினை தொடர்ந்து பிரம்மாணடமாய் கும்கி. மைனாவில் ச‌ரியாக ஒரு மலைக்கிராமத்தை பிரதிபலித்தவர் மீண்டும்  ஒரு மலைக்கிராமத்தினை பின்னணியில் படைத்திருக்கும் காதல் காவியம் - கும்கி.

காட்டு யாணையின் அட்டகாசத்தில் மலைக்கிராமத்து மக்கள் கொடூரமாய் கொல்லப்படுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளோ இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு இடத்திற்கு செல்லவேண்டியதுதானே என தெரிவிக்க 200 வருட பாரம்பரிய மலைநில விவசாய வாழ்க்கையை, கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத கிராமத்து மக்கள்
தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள   காட்டு யானைகளைகளுடன் மோதி சண்டையிட்டு அழிப்பதற்காக தயார்படுத்தப்பட்ட ஒரு கும்கி யானையைக் கொண்டுவருகின்ற முடிவு செய்கின்றனர்.

கும்கி யானைப்பாகனுக்கு குடும்ப பிரச்சினை வர, இரண்டு நாள் சமாளிக்க புதிதாக ஒரு யானை வருகிறது வெடி வெடித்தாலே தலைதெறிக்க பயந்து ஓடும் பயந்த திருவிழா யானை மாணிக்கம்.
இரண்டு நாள் அங்கே வந்த  நாயகன்  நாயகியை கண்டதும் காதலாக அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கும்கி திரைப்படத்தின் கதை.



நடிகர் திலகம் சிவாஜியின் பேரனும், பிரபுவின் மகனுமான அறிமுக நாயகன் விக்ரம்பிரபு - நல்லதொரு தொடக்கம். உயரம், உடல் வாகு எல்லாம் பாகனுக்கு பொருந்துகிறது. காதல் - சோகம் என்கிற இரண்டே உணர்ச்சிகளுடன் இவர் கேரக்டர் செல்கிறது.  கோபத்தில் புடைக்கும் மூக்கும், கட்டான உடலும் இருப்பதால் இவரை விரைவில் ஆக்ஷன் ஹீரோ அவதாரத்தில் காணும் சாத்தியக்கூறுகள் அதிகம்!



அறிமுக நாயகி - லட்சுமி மேனன் - இது தான் அவருடைய முதல் திரைப்படம் என்றாலும் அவர் இரண்டாவதாக நடித்த சுந்தர பாண்டியன் முதலில் வெளியானது. சுந்தர பாண்டியனில் பார்த்ததை விட இளமையாக,  காட்டு வாசி பொண்ணு! அதுக்கேத்த ட்ரெஸ், ஊசி பாசி இத்யாதி இத்யாதிகள், சைடுல குதிரவால் ஹேர் ஸ்டைல்னு மேக்கப்பே இல்லாமல் நடிக்க தெரிந்த அழகான நடிகை ! 


 தாய்மாமனாக வித்தியாசமான கெட்டப்பில் தம்பி ராமைய்யா!  படத்தின் கலகலப்புக்கு மொத்த குத்தகைதாரர்.இவர் மைன்ட் வாய்ஸில் புலம்பும் போதும்,

அவரை கும்கி பயிற்சியில் தேர்ந்த குரு என நினைத்து மலைவாசிகள் பெருமையாக பேசுவதும், அதற்கு அவர் உள்ளுக்குள்ளேயே புலம்புவதும்,

போலீசிடம் " நீங்களும் ஒரு மாமா தானே? " எனும்போதும் , டெம்போவில் யானை ஏற்றி போகும் போது பேசுவதாகட்டும் 

பன்னிப்பயலே உனகெல்லாம் First Night ஆரம்பிக்கும்போது பககவாதம் வந்துடனும்

உனக்கு சாபம் விடறேன்.. நீ எத்தனை கல்யாணம் பண்ணினாலும் அது டைவர்ஸ்ல தான் போய் முடியும்..
 
போன்ற வசனங்களின் மூலம் திரையங்கயே கலகலக்க வைக்கிறார்.



இசை டி.இமான், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிப்பு, படத்தை வெளியிடுவது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கி‌‌ரீன் என்று பக்கா பட்டாளம். ஒளிப்பதிவு சுகுமார், பாடல்கள் யுகபாரதி என்று அதே பழைய மைகா கூட்டம்..

படத்தின் சிறப்பம்சங்கள்:

இயற்கையோடு இணைந்த எளிமையான காதல் கதை, அற்புத பாடல்கள், அழகான  நாயகன் - நாயகி. நல்ல நகைச்சுவை..  

இமானின் இசை செவிக்கு விருந்து..  அனைவரையும் கட்டிபோட்டுவிட்டது.

எடிட்டர் எல்.வி.கே.தாஸ் கைவண்ணத்தில், மைனா புகழ் சுகுமாரின் ஒளிபதிவில் கும்கி திரையுலகை அதிரவைப்பது நிச்சயம்.

குழந்தையாய் இருக்கும் மாணிக்கம் பயிற்சி பெற்றவுடனேயே அது கும்கியாக மாறி கொம்பனை துவம்சம் செய்வது போல் காட்டாமல்  எளிதில் யூகிக்க முடியாத ஒரு க்ளைமேக்ஸை தேர்ந்தெடுத்ததில் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.

கும்கி கண்டிப்பாக ரசிகர்களின் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!




No comments:

Post a Comment