Wednesday, March 27, 2013

இரங்கல்: நடிகை சுகுமாரி




பத்து வயதில் தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் “ஓர் இரவு” திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை சுகுமாரி ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘வசந்த மாளிகை’ போன்ற திரைப்படங்களில்  எம்.ஜி.ர், சிவாஜி, ஜெமினி கணேசன்  போன்ற மறைந்த நடிகர்களோடு மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறை நடிகர்களான பிரஷாந்த், அஜீத், மாதவன், விஜய் மற்றும் தனுஷ் ஆகியோருடனும் பொன்னர் சங்கர் பூவெல் லாம் உன் வாசம், அலைபாயுதே, வேட்டைக்காரன், யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாது ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். 

"நம்ம கிராமம்' படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார். 2003-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான திரைப்படங்களில் தனது நடிப்பின் மூலம் நீங்கா இடம் பெற்ற  நடிகை சுகுமாரி தனது 74 வயதில் சிறுநீரகக் கோளாறால் ( 26 மார்சு 2013) அன்று இயற்க்கை எய்தினார்.

1 comment:

  1. so sad :( Seriously she is such a great Actor..Cinema world miss you a lot! :(

    Rest in peace Mam

    Sathya

    ReplyDelete