Sunday, April 14, 2013

இரங்கல்: பாடகர் பி. பி. ஸ்ரீனிவாஸ்


 
ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் பிறந்து முறையாக கர்நாடக சங்கீதம் பயின்று  துறைக்கு தனது 22ஆம் வயதில் தமிழ்த் திரையுலகில் யார் யார் யாரவர் யாரோ என்ற பாடலின் மூலம் அடியெடுத்து வைத்தார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

தமிழ்மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார் பி.பி.ஸ்ரீனிவாஸ்.

திரைப்படப் பாடல்கள் மட்டுமல்லாது, பக்திப் பாடல்கள், சுலோகங்கள், தோத்திரங்களும் இவர் அதிகம் பாடியுள்ளார். சாரதா புஜங்க ஸ்தோத்திரம், ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம்,  முகுந்த மாலை, ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்தோத்ரம், புரந்தரதாஸர் தேவநாமாக்கள் என இவர் பாடிய ஸ்தோத்திரங்கள் இன்றளவும் அன்பர்களால் கேட்டு ரசிக்கப்படுகின்றன.

தனது தேனிசை குரலால் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி ரசிகர்கள் உள்ளங்களில் நிறைந்த பி.பி.ஸ்ரீனிவாஸ் தமது 82ஆம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

No comments:

Post a Comment