கால் நூற்றாண்டிற்க்கு முன் கடலுக்கு சென்று திரும்பாத கணவனுக்காக
காத்திருக்கிறாள் மனைவி. ஒரு கட்டத்தில் அவனது எலும்புக்கூட அவளின்
வீட்டிற்குள்ளேயே கண்டுபிடிக்கப் படுகிறது. காணாமல் போனவன் எப்படி பிணமானான் என்று போலீஸ் விசாரணை செய்ய, அவளோ தன் கணவனை கொன்றதாக வாக்குமூலம் கொடுக்கிறாள். எப்படி? எதற்காக? என்பதை கால் நூற்றாண்டு
பின்னோக்கிச் சென்று குடிகாரனான அருளப்பசாமிக்கும், சர்ச்சில் ஊழியம்
செய்யும் கன்யாஸ்திரியின் வளர்ப்பு மகளான எஸ்தருக்குமிடையே ஆன காதல்...
சேவியர் - அருளப்பசாமி - எஸ்தர் - மேரி - லூர்தசாமி - ஆப்ரகாம் - ஜோசப்
பாரதி - எபிநேசர் - பெனிடா - அஜேனிஸ் போன்ற கிருத்தவ பெயர்களுடன்
ராமேஸ்வரம் தங்கச்சி மடம் - மீனவ குப்பத்தின் பிண்ணணியில்
குடிப்பழக்கம்,மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் இன்னல் என பல சமூக அவலங்களை
சிற்ப்பாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
வெண்ணிலா கபடிக்குழு - குள்ள நரிக்கூட்டம் வெற்றிப்படங்களை தொடர்ந்து நாயகன் விஷ்ணுவுக்கு இது முக்கியமான படம். ஒவ்வொரு காட்சியிலும் விஷ்னு நடிப்பின் முக்கியத்துவத்தினை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்..
நாயகி சுனைனாவுக்கு லைஃப் டைம் கேரக்டர். மேக்கப் இல்லாமல் கடற்கரையோர எஸ்தராகவே மாறியிருக்கிறார். - கடலோரும் வாழ்பவர்கள் கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இளஞசிவப்பு உதட்டழகி இப்படி கருக வைத்திருப்பது தவிற்கப்பட்டிருக்கலாம்.
நாயகன் தன்னை பார்க்க வரும்போது “சாத்தானே அப்பால் போ!” என பயந்து ஓடுவதும், பற்கள் தெரியாமல் சிரிப்பதும், காதலை கண்ணிலே காட்டுவதும், படகு தயாராகும் போது ஆர்வத்துடன் வந்து பார்பதுமாக.. தன் நடிப்பினை சிறப்பாக வெளிப்படிதிருக்கிறார்...
நாயகன் தன்னை பார்க்க வரும்போது “சாத்தானே அப்பால் போ!” என பயந்து ஓடுவதும், பற்கள் தெரியாமல் சிரிப்பதும், காதலை கண்ணிலே காட்டுவதும், படகு தயாராகும் போது ஆர்வத்துடன் வந்து பார்பதுமாக.. தன் நடிப்பினை சிறப்பாக வெளிப்படிதிருக்கிறார்...
நாயகனின் தந்தையாக வரும் "பூ' ராமுவுக்கு நேர்த்தியான பாத்திரம். பாசக்கார தாயாக வரும் சரண்யாவுக்கு இது மற்றொரு பரிமாணம். . தென்மேற்குப் பருவக் காற்றில் அசத்தியது போல் இதிலும் அவரது நடிப்பு அருமை..
குடிக்க தன்மகனுக்கு காசுகொடுக்கும் போது வழங்கும் அறிவுரை - “நல்ல சரக்கா வாங்கி குடிடா; கண்ட கண்ட சரக்கை குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே", போதை மறுவாழ்வு மையத்தில் “ பாத்து மெதுவா திருத்துங்கடா.. ஓரேயடியா திருத்திடாதீங்க”... என்றும் பின் “ செல்லம் கொடுத்துதான் கெடுத்துடோம்” என்று புலம்புவதும் அம்மா பாத்திரத்துக்கு பொருத்தம்..
குடிக்க தன்மகனுக்கு காசுகொடுக்கும் போது வழங்கும் அறிவுரை - “நல்ல சரக்கா வாங்கி குடிடா; கண்ட கண்ட சரக்கை குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே", போதை மறுவாழ்வு மையத்தில் “ பாத்து மெதுவா திருத்துங்கடா.. ஓரேயடியா திருத்திடாதீங்க”... என்றும் பின் “ செல்லம் கொடுத்துதான் கெடுத்துடோம்” என்று புலம்புவதும் அம்மா பாத்திரத்துக்கு பொருத்தம்..
பங்குத்தந்தையாய் வரும் அழகம்பெருமாள் அந்த வட்டார வழக்கை பேசி அருமையாக நடித்திருக்கிறார்..
பிளாக் பாண்டி திருந்திய பிறகு பாதர் " என்னப்பா ஒழுக்கமா இருக்க
ஆரம்பிச்சிட்டே போலருக்கே" அதுக்கு பிளாக் பாண்டி " ஆமா பாதர்; ஆனா
ஞாயித்து கிழமையானா ஒழுக்கத்துக்கு லீவு விட்டுடுவேன் பாதர் "
விஷ்ணுவும் பிளாக் பாண்டியும் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்க செல்லும் இடம் ...
சுனைனாவிடம் சரண்யா " நீயாவது அவன்கிட்டே பேசி வேலைக்கு அனுப்பு; இந்த காலத்து பசங்க எல்லாம் அம்மா சொன்னா எங்கே கேட்குறானுங்க? உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணு சொன்னாதான் கேக்குறானுங்க"
இயக்குனர் சீனு ராமசாமி வரும் ஒரே காட்சி: அதில் அவரும் தம்பி ராமையாவும்
பேசும் டயலாக் " பாத்துய்யா ; லேடிஸ் ஸ்கூல் வேணும்னு ஆர்வமா இருக்குறே ;
பாலியல் புகார் வந்துட போகுது "
இவ்வளவு ஆழமான மீனவ வாழ்க்கை இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படவில்லை என்றே தோண்றுகிறது..
முஸ்லீம் மீனவராக வரும் இயக்குனர் சமுத்திரக்கனியின் அனல் வீசும் வசனம் “இந்த நாட்ல வெறந்த தொழில் செய்யரவனையும் வேற நாட்டுகாரங்க சுட்டா சும்மா விடுவானா..நம்மகிட்ட ஒத்தும இல்லயா... ஒரு கவர்மெண்டு பஸ்காரன அடிச்சா.. தமிழ் நாட்டுல ஒரு பஸ் கூட ஓடாது தெரியுமா...” மீனவர்களின் இன்றய பிரச்சனைய பறைசாற்றுகிறது..
படத்தின் சிறப்பம்சங்கள்:
சுப்பிரமணியனின் கேமரா கதையை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. முன் பின் நகரும் திரைக்கதையை குழப்பம் இல்லாமல் கச்சிதமாக செதுக்கியிருப்பதில் எடிட்டர் காசி.மு.விஸ்வநாதனின் உழைப்பு மிக அருமை.
என்.ஆர்.ரஹ்நந்தனின் பின்னணி
இசை படத்துக்கு பலம். சூழ்நிலைக்கு ஏற்ற
பாடல்கள், மீனவர்களின் வலியை கவிஞர் வைரமுத்து வரிகளாக்கிய விதம் - பிரம்மாண்டம்..
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்றா கதையை விவாதத்துக்கு கொண்டு வந்ததற்காகவே சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள். "முதல் கல்'லை எறிந்த கவனிக்கத்தக்க சில இயக்குநர்களின் பட்டியலில் "நீர்ப்பறவை' மூலம் இணைந்திருக்கிறார் சீனு ராமசாமி.
சுனைனாவிடம் சரண்யா " நீயாவது அவன்கிட்டே பேசி வேலைக்கு அனுப்பு; இந்த காலத்து பசங்க எல்லாம் அம்மா சொன்னா எங்கே கேட்குறானுங்க? உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணு சொன்னாதான் கேக்குறானுங்க"
இவ்வளவு ஆழமான மீனவ வாழ்க்கை இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படவில்லை என்றே தோண்றுகிறது..
முஸ்லீம் மீனவராக வரும் இயக்குனர் சமுத்திரக்கனியின் அனல் வீசும் வசனம் “இந்த நாட்ல வெறந்த தொழில் செய்யரவனையும் வேற நாட்டுகாரங்க சுட்டா சும்மா விடுவானா..நம்மகிட்ட ஒத்தும இல்லயா... ஒரு கவர்மெண்டு பஸ்காரன அடிச்சா.. தமிழ் நாட்டுல ஒரு பஸ் கூட ஓடாது தெரியுமா...” மீனவர்களின் இன்றய பிரச்சனைய பறைசாற்றுகிறது..
படத்தின் சிறப்பம்சங்கள்:
சுப்பிரமணியனின் கேமரா கதையை கைப்பிடித்து கூட்டிச் செல்கிறது. முன் பின் நகரும் திரைக்கதையை குழப்பம் இல்லாமல் கச்சிதமாக செதுக்கியிருப்பதில் எடிட்டர் காசி.மு.விஸ்வநாதனின் உழைப்பு மிக அருமை.
பாடல்கள், மீனவர்களின் வலியை கவிஞர் வைரமுத்து வரிகளாக்கிய விதம் - பிரம்மாண்டம்..
தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்றா கதையை விவாதத்துக்கு கொண்டு வந்ததற்காகவே சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள். "முதல் கல்'லை எறிந்த கவனிக்கத்தக்க சில இயக்குநர்களின் பட்டியலில் "நீர்ப்பறவை' மூலம் இணைந்திருக்கிறார் சீனு ராமசாமி.
No comments:
Post a Comment